பெருந்துறை அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: டிரைவர்–கண்டக்டர் படுகாயம்…!!
கோவையில் இருந்து சேலத்துக்கு ஒரு அரசு பஸ் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இந்த பஸ் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் பெருந்துறை பைபாஸ் டீச்சர்ஸ் காலனி அருகே வந்த போது முன்னால் சேலம் நோக்கி ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீர் என்று எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு லாரி மீது பஸ் மோதி லாரி உள்ளே புகுந்தது.
இதில் பஸ்சின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. பஸ் கண்டக்டர் குமாரபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராதா கிருஷ்ணன் (வயது 45) டிரைவர் செந்தில் குமார் (42) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
மேலும் இந்த விபத்தில் 10 பேர் லேசான காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.
கண்டக்டரும், டிரைவரும் மிகவும் ஆபத்தான நிலையில் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை போலீசார் விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி தவித்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating