கயத்தாறு அருகே லாரி மீது கார் மோதியதில் கணவருடன் பேராசிரியை பலி…!!

Read Time:3 Minute, 49 Second

cd07831e-0b68-49bd-8bc2-4b7400d88633_S_secvpfதிருச்சி அருகே உள்ள காட்டூர் விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 45). இவரது மனைவி மீனாக்குமாரி (44). இவர்களுக்கு சூர்யா (10) என்ற மகனும், வைதேகி (8) என்ற மகளும் உள்ளனர்.

சந்தோஷ்குமார் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் டயர் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். மீனாக்குமாரி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மீனாக்குமாரியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக சந்தோஷ்குமார் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டார். காரை ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த முபாரக் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.

அவர்களது கார் மதுரை–நெல்லை நான்குவழி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கரிசல்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற மணல் லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் பின்னால் சென்று கொண்டிருந்த சந்தோஷின் கார் பயங்கர வேகத்தில் லாரியின் பின் பக்கத்தில் மோதியது.

லாரியின் அடியில் கார் சிக்கி உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த சந்தோஷ்குமார், அவரது மனைவி மீனாக்குமாரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகன் சூர்யா, மகள் வைதேகி, டிரைவர் முபாரக் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்–இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் பலியான கணவன்– மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார் டிரைவர் முபாரக் மற்றும் வைதேகி ஆகிய இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து குறித்து திருச்சியில் உள்ள சந்தோஷ்குமாரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து பலியான கணவன்–மனைவி உடலை பார்த்து கதறி அழுதனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று பிள்ளைகளின் தந்தை நஞ்சருத்தி தற்கொலை..!!
Next post மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்..!!