மலசலகூடத்திற்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடன், கூடவே சென்றார் சர்வா?! (நடந்தது என்ன..?)
மலசல கூடத்திற்கு எழுந்து சென்ற இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் தென்மராட்சி அமைப்பாளர் சர்வாவும் இணைந்து சென்ற சம்பவம் இன்று நடைபெற்றது.
வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்ற போது வீதி சம்பநதப்பட்ட விடயங்கள் இணைத்தலைவர்கள் முன்னிலையில் ஆராயப்பட்டுக் கொண்டிருந்தன.
இதன் போது இணைத்தலைவர்களில் ஒருவரான விஜயகலா மகேஸ்வரன் தனது தனிப்பட்ட தேவைக்காக எழுந்து சென்றார்.
இதனை அவதானித்த அவரது செயலாளர் சைகை மூலம், சர்வாவை நோக்கி பின்னே செல்லுமாறு கூறினார்.
அப்போது மலசல கூடத்திற்கு அருகே சென்ற அமைச்சர் சிறிது பின்னே பார்த்து விட்டு உள்ளே செல்ல ஆயத்தமானார். அப்போது சர்வா அருகில் நின்றுள்ளார்.
உடனே சர்வாவை நோக்கி “நான் வெளியில் செல்லவில்லை, நீங்கள் போங்கள், நான் இங்கே போகின்றேன்” என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த சர்வா, செயலாளர் கிருபாவை நோக்கி கையசைத்து ஏதோ காட்டினார்.
Average Rating