கேரளாவில் மரம் விழுந்து ஒரு கல்லூரி மாணவி பலி, இரண்டு மாணவிகள் கவலைக்கிடம்…!!
Read Time:1 Minute, 24 Second
கேரளாவில் கல்லூரி விழா ஒன்றின் போது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒரு மாணவி உயிரிழந்தார், இரண்டு மாணவிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில், கோழிக்கோடு பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் கல்லூரிகளின் டி மண்டலம் இளைஞர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் வந்திருந்தார்கள்.
இன்று கல்லூரி வளாகத்தில் விழா நடைபெற்றுக்கொண்டு இருந்த போது மரம் ஒன்று வேரோடு பிடிங்கிக்கொண்டு கிழே சாய்ந்தது. மரத்தின் அருகில் நின்ற மாணவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். ஆனாலும் சில மாணவிகள் மீது மரம் சாய்ந்துவிட்டது. இந்த விபத்தில் அனுஷ்கா என்ற முதலாம் ஆண்டு மாணவி உயிரிழந்து விட்டார். இரண்டு மாணவிகளின் நிலை கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Average Rating