இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து – இருவர் படுங்காயம் – சாரதி கைது..!!

Read Time:1 Minute, 50 Second

page1-img2அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் 18.02.2016 அன்று இரவு 8.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியும் மற்றுமொருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

கினிகத்தேனையிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் அட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி, கெப் ரக வாகனத்தில் மோதுண்டு பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.

கெப் ரக வாகனத்தின் சாரதி வாகனத்தை அதிக வேகமாக செலுத்தியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் மரம் விழுந்து ஒரு கல்லூரி மாணவி பலி, இரண்டு மாணவிகள் கவலைக்கிடம்…!!
Next post வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் மரணம்..!!