வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி தண்டவாளங்களை பரிசோதிக்கும் 4 தொழிலாளிகள் பலி..!!

Read Time:1 Minute, 27 Second

downloadமராட்டிய மாநில தலைநகரான மும்பையின் புறநகர் பகுதியான குர்லா-வித்யா விஹார் நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தண்டவாளங்களை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் (கேங்மென்) அவ்வழியாக வேகமாக வந்த புறநகர் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலை சுமார் 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த கோரவிபத்து தொடர்பாக கருத்து தெரிவித்த ரெயில்வே அதிகாரிகள், அப்போது பனிமூட்டமாக இருந்ததால் அவ்வழியாக வந்த ரெயிலின் டிரைவர் தண்டவாளத்தின் மீது தொழிலாளிகள் இருப்பதை கவனிக்க முடியாமல் போயிருக்கலாம். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மூன்றாம் தேதி அருகாமையில் உள்ள தானே மாவட்டத்தில் தண்டவாளங்களை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளிகள் ரெயில் மோதி இறந்தது நினைவிருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்து செல்ல அனுமதி…!!
Next post யாழ்ப்பாணம் பொலிஸ் பொறுப்பதிகாரி வூட்லருக்கு நடந்த சோதனை..!!