கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர் மீது கற்பழிப்பு புகார்..!!
இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவர் பிரித்வி ஸ்ரீதர் (21). இவர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் குவின்ஸ் கல்லூரியில் படித்தார். இவர் தன்னுடன் படித்த மாணவியை கற்பழித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு இவர் தனது சகமாணவியுடன் ஒரு வாடகை காரில் பயணம் செய்தனர். அப்போது காரில் வைத்து அவர் தன்னை கற்பழித்ததாக மாணவி புகார் தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 4–ந் தேதி நடந்தது. அதை தொடர்ந்து பிரித்வி ஸ்ரீதர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகிறது. அப்போதுதன் மீது கூறப்பட்ட புகாரை பிரித்வி மறுத்தார். சம்பவத்தன்று டாக்சியில் பயணம் செய்த போது அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததாக கூறினார்.
ஆனால் வரம்பு மீறி மாணவியுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்துக்கொள்ள வில்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating