இலங்கையர் சிங்கபூரில் கைது…!!
பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்டவர் , மும்பாய் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது
குமார்பிள்ளை என அழைக்கப்படும் இவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடியாணை ஒன்றினை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளுடன் தொடர்பைக் கொண்டவர் என சந்தேகிக்கப்படும் இவர் குறித்த விபரங்கள் சிங்கப்பூர் அதிகாரிகளினால் வெளியிடப்படவில்லை.
சந்தேக நபர் இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சிங்கப்பூர் அதிகாரிகள், அவரது அடையாளம் மற்றும் விபரங்கள் தெரியவந்ததன் பின்னரே, முழு தகவல்களும் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்
Average Rating