குழப்பம் விளைவித்த பிக்குகள் நீதிமன்றில் இன்று ஆஜர்..!!
Read Time:1 Minute, 23 Second
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானாசார தேரரை கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கடந்த மாதம் ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த ஐந்து பிக்குகளையும் இன்று சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர தெரிவித்தார்.
இப்பிக்குகள் ஐவரும் நேற்று வெள்ளிக்கிழமை ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து, இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இதேவேளை, எனது கைகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கின்றேன் என ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரகித் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு மற்றுமொரு இராணுவ உத்தியோகத்தர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Average Rating