காணாமல் போன மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு…!!

Read Time:1 Minute, 36 Second

dead (4)திருகோணமலை, கும்புறுப்பிட்டி கடற்கரையில் ஆணொருவரின் சடலம், இன்று சனிக்கிழமை (20) காலை 10.30க்கு மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி, இரண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றதாகவும் அவ்விருவரும் 17ஆம் திகதி வரை வீட்டுக்கு வரவில்லை என துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறு காணாமல் போன இருவரில் ஒருவரின் சடலமே, இன்று மீட்கப்பட்டதாகவும் சடலமாக மீட்கப்பட்டவர், திருகோணமலை – அபயபுரப் பகுதியைச் சேர்ந்த ரோகன நிசாந்த முனவீர (வயது 44) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மீனவர், இறுதியாக நீல நிற மேல் அங்கி மற்றும் நீல நிறக் காற்சட்டை அணிந்திருந்ததாகத் தெரியவருகின்றது.

சடலம், தற்பொழுது கும்புறுப்பிட்டி கடற்கரையிலிருந்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை குச்சவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழப்பம் விளைவித்த பிக்குகள் நீதிமன்றில் இன்று ஆஜர்..!!
Next post கண்ணீர் புகைத்தாக்குதலைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்…!!