பெண்களை தொட்டால் ஷாக் அடிக்கும் : சில்மிஷ ஆண்களுக்கு ஆப்பு…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அகோர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் நிரஞ்சன் சுதார் என்பவர்தான் இந்த கையுறையை கண்டுபிடித்துள்ளார்.
நிரஞ்சனுக்கு மின்னனு கருவிகள் உருவாக்குவதில் அதிக ஆர்வம் உண்டு. பெரும்பாலான இடங்களில் பெண்கள் ஈவ்டீசிங் மற்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதால், அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு மின்னனு கருவி தயாரிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
இரண்டு வருட கடுமையான உழைப்பிற்கு பிறகு ஒரு மின்னனு கையுறையை அவர் உருவாக்கியுள்ளார். 150 கிரம் எடையுள்ள அந்த கையுறையில் சிம்கார்டு, ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3.4 வோல்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி ஒன்றும் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் தயாரிப்பு செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தான்.
தனியாக செல்லும் பெண்கள் இந்த கையுறையை அணிந்து கொண்டால் போதும். ஆண்கள் யாராவது அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டால், அந்த பெண் இந்த கையுறையால் அவரக்ளை தொட்டால் போதும். அதிலுள்ள 3.4 வோல்ட் மின்சாரம் 220 வோல்ட் மின்சாரமாக மாறி அவர்களின் மீது பாயும். இதில் அவர்கள் நிலை குலைந்து போவார்கள்.
அடுத்து, அதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்பிவிடும். மேலும், அதிலுள்ள கேமரா அந்த ஆண்களை படம் எடுத்துவிடும். இந்த கையுறை பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. சகமாணவர்கள் இவரை பாராட்டியுள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் நிரஞ்சனின் கண்டுபிடிப்பு பார்வைக்கு வைக்கப்பட்டு பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. அடுத்து மார்ச் மாதம் நடைபெற உள்ள தேசிய அறிவியல் கண்காட்சியிலும் அந்த கையுறை இடம் பெற உள்ளது.
விரைவில் அவரது கண்டுபிடிப்பு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating