கஸகஸ்தானின் Berezovka கிராமத்தில் மர்ம நோயால் பீடிக்கப்படும் சிறுவர்கள்…!!
கஸகஸ்தானின் Berezovka கிராமத்தில் உள்ள சிறுவர்கள் பலர் மர்ம நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
தலைச்சுற்றல், கை கால்களில் உணர்ச்சியின்மை, மங்கிய பார்வை, வலிப்பு, பிடிப்புகள், குமட்டல் போன்ற குறைபாடுகளால் அங்குள்ள சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில குழந்தைகள் 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாகத் தூங்கி எழுவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
Berezovka கிராமத்திற்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் நச்சு வாயு காரணமாகவே குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
என்றாலும், குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரும் அந்நாட்டு அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
இதனால், Berezovka கிராம மக்கள் அங்கிருந்து 15 மைல்கள் தொலைவில் உள்ள அக்சய் என்னும் கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இருப்பினும் சிறுவர்களிடையே இந்த நோய் பரவல் தொடர்ந்தும் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
Average Rating