மனைவியை கொன்ற கணவன் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை முயற்சி..!!
Read Time:1 Minute, 8 Second
தெனியாய மொரவக்க பகுதியில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (21) முன்னெடுக்கப்படவுள்ளன.
சம்பவத்தில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்ட சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மொரவக்க பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Average Rating