குப்பைக்கு தீ வைத்த பெண் மரணம்..!!
Read Time:1 Minute, 27 Second
குப்பைக்கு வைத்த தீயில் தவறுதலாக மயக்கமடைந்து வீழ்ந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 12 நாட்களின் பின்னர் சிகிச்சை பயலனளிக்காத நிலையில் மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.
இவ்வாறு மரணத்தை தழுவிக்கொண்டவர் புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த பிரபாகரன் சுதர்சினி (27) என்பவராகும்.
கடந்த 8ம் திகதி பிற்பகல் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு, உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைககு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
குறித்த பெண் சிகிச்சைக்கு பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Average Rating