பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்து யாழில் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்..!!
Read Time:1 Minute, 1 Second
கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகளின் ஆப்பாட்டத்தின் போது பொலிஸார் நடாத்திய தாக்குதலை கண்டித்து யாழில் பட்டதாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் காலை 11 மணிக்கு யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லாட்சியிலும் பட்டதாரிகள் நடுத்தெருவிலா? பட்டப்படிப்புக்கு கண்ணீர் புகைகுண்டா? வடமாகாணசபை பட்டதாரி களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எங்கே? போன்ற கேள்விகளைத் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating