கருங்கல்லால் தாக்கப்பட்டு கணவன் கொலை – சந்தேகத்தின் பேரில் மனைவி கைது..!!
Read Time:55 Second
பண்டாரவெல – எடம்பிட்டிய – எல்லேவெல பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நபர் ஒருவர், தலையில் கருங்கல்லால் தாக்கப்பட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 48 வயதுடைய இரு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக எடம் பிட்டிய காவற்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் ஊவா ஹைலேண்ட்ஸ் ;தோட்டத்தில் களப்பணி அதிகாரியாக சேவை புரிந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating