திருமலையில் காணாமற்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..!!
திருகோணமலையிலிருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்ற நிலையில் காணமாற்போன இரு மீனவர்களில், ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணமற்போனவர்களின் ஒருவரின் சடலம் குச்சவெளி – கும்புருப்பிட்டிய கடற்கரையில் ஒதுங்கிய நிலையி்ல கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அம்பேபுர பகுதியில் வசித்துவரும் 44 வயதுடைய மீனவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீதான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நிறைவுபெற்றதையடுத்து, சடலம் உறவினர்களிடம் கைளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணமற்போன மற்றைய மீனவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
மிஹிந்திபுர பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய மீனவரே காணமற்போயுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி திருகோணமலை கடற்பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்கு சென்ற வேளையில் இரு மீனவர்களும் காணமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating