ஆசிரியைக்கு “செக்ஸ்” தொல்லை கொடுத்தவர் கைது
தாம்பரம் அருகில் உள்ள சேலைïர் சந்தோஷபுரம் கலைஞர் கருணாநிதி தெரு வைச்சேர்ந்தவர் ராஜ்குமார் (47). இவரது நண்பர் கோபாலன். இவருக்கு கலையரசி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் இருக்கிறார். கலையரசி மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவரது அழகில் ராஜ்குமா ருக்கு மோகம் ஏற்பட்டது. நண்பரின் மகள், மற்றும் தன் மகள் வயதுக்கு சம மான பெண் என்று கூட நினைக்காமல் அவர் மனதில் காமசிந்தனைகள் எழுந்தன. கலையரசி மீது கொண்ட ஆசை ராஜ்குமாரை நாள டைவில் காமக்கொடூ ரனாகவே மாற்றி விட்டது. இதனால் அவர் கலையரசியை பார்க்கும் போதெல்லாம் செக்ஸ் ஈவ்டீசிங்கில் ஈடு பட்டார். கலையரசியின் அழகை வர்ணித்து பேசுவார். என்னோடு வந்து விடு என்று நச்சரித்தார். இதனால் பள்ளிக்கும் போகவே பயப்பட கலையரசி, துணைக்கு தன் அண்ணனை அழைத்து சென்று வந்தார். இதையடுத்து ராஜ்குமார் கடிதங்கள் மூலம் கலையரசிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார். வேறு நபர்களை எழுத வைத்து கடிதங்களில் ஆபாசத்தை கொட்டினார். கலையரசி தனியாக பள்ளிக்கு சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்த ராஜ்குமார் செக்ஸ் வார்த்தைகளை அள்ளி வீசினார். “நான் எவ் வளவு கடிதம் எழுதினேன். ஏன் என்னை கண்டு கொள்ள வில்லை” என்றார். பிறகு அவர், ஒருநாள் மட்டும் என்னுடன் வா. ரூம் போடுகிறேன் என்ற ரீதி யில் அசிங்கமாக நடந்து கொண்டார். இதனால் மன வேதனை அடைந்த கலையரசி வீட்டில் வந்து கண்ணீர் விட்டு அழுதார். ராஜ்குமாரின் தொல்லை பொறுக்க முடியாத அளவுக்கு இருந்ததால் சேலைïர் போலீ சில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினார். அப் போது ராஜ்குமார் மனைவி ஆசிரியை என்பதும், அவர் சம்பாத்தியத்தில் வாழும் இவர் சும்மா ஊர் சுற்றி வருவ தும் தெரிய வந்தது. போலீசார் நடவடிக்கை எடுப்பது தெரிந்ததும் ராஜ் குமார் தான் மனித உரிமை கமிஷனில் இருப்பதாக தெரிவித்தார். மனித உரிமை கமிஷன் என்ற பெயரில் மிரட்டலிலும் ஈடுபட்டார் இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடிதங்கள் எழுதி செக்ஸ் தொல்லை கொடுத்தது உறுதி செய்யபட்டதால்ராஜ் குமார் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடை சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிறகு ஜெயிலில் அடைக் கப்பட்டார்