வில்லன் வேடத்தில் நடிக்க ஆசை தனுஷ்

Read Time:3 Minute, 3 Second

dhanush4.jpgபரத் நடிக்கும் `பழனி” பட பாடல் கேசட் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்று பேசியதாவது:- எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்தில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். அவர் ஹீரோவாகிவிட்டார் சேரன் இயக்கும் படத்தில் நடிக்க விரும்பினேன். அவரும் கதாநாயகனாகிவிட்டார். அது போல் அமீர் படத்தில் நடிக்க விரும்பினேன். அவரும் கதாநாயகானாகி விட்டார். டைரக்டர்கள் நடிகர்களாகி விட்டதால் டைரக்டர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சத்யராஜ் கதாநாயகான நடிக்கும் படமொன்றில் வில்லனாக நடிக்க ஆசைப் படுகிறேன். எப்போது அந்த படம் தயாராகும் என்பதை சத்யராஜ் விரைவில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதில் அளித்து சத்யராஜ் பேசியதாவது:- தனுஷ் நன்றாக பேச கற்றுக் கொண்டுள்ளார். ஒரு முறை டெலிபோனில் அசல் ரஜினி குரலிலேயே என்னிடம் பேசி ஆச்சரியப்படுத்தினார். நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவர் வில்லனாக நடிக்க ஏன் ஆசைப்படுகிறார் என்று தெரியவில்லை. எதற்காக இப்படி பேசினார் என்றும் புரியவில்லை. ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்து தான் இப்படி பேசி இருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் பகுத்தறிவாளனாக மாற காரணமே பழனி முருகன்தான். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் வகுப்பில் தேறினால் மொட்டை போடுவேன் என்று அவரை வேண்டினேன். அது போல் தேர்ச்சி பெற்றேன். உடனே மொட்டை போட்டு விட்டு மேல் படிப்புக்கு போனேன். ஆசிரியர் என்னிடம் படிக் காமல் பரீட்சை எழுது கடவுள் பாஸ் பண்ணி விடுகிறாரா பார்ப்போம் என்றார். படிக்காமல் பரீட்சை எழுதினேன். தோற்றேன். கடவுளிடம் வேண்டாமல் நன்றாக படித்து எழுது பாஸ் ஆவாய் என்றார் அது போல் செய்தேன். பாஸ் ஆகிவிட்டேன். அதன் பிறகு நான் பகுத்தறிவாளனாக மாறினேன். இவ்வாறு அவர் பேசி னார். விழாவில் நடிகர்கள் விஷால், ஜீவா, அருண்விஜய், பரத், கார்த்தி, நடிகை குஷ்பு டைரக்டர்கள் பேரரசு, எஸ்.ஜே. சூர்யா, பட அதிபர் ஏ.வி.எம். சரவணன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆசிரியைக்கு “செக்ஸ்” தொல்லை கொடுத்தவர் கைது
Next post கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி