ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து…!!
Read Time:51 Second
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 5–வது மாடியில் பொது நோயாளிகள் வார்டு உள்ளது. இதன் ஜன்னல் வெளிப்புறத்தில் உள்ள ‘சன்சைடு’ சிலாப்பில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு குவிந்து கிடந்த கழிவு பஞ்சு மற்றும் பேப்பரில் தீப்பற்றி எரிந்தது.
இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் பீதியுடன் ஓட்டம் பிடித்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். யாரோ போட்ட சிகரெட் நெருப்பால் தீப்பற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
Average Rating