சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை நாளை ஆரம்பம்..!!
கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை நாளை (23) ஆரம்பமாவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதி வரை 1,205 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 651 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
நாளை ஆரம்பமாகவுள்ள அழகியற்கலை பாட செயன்முறை பரீட்சைக்கான பாடசாலை பரிட்சார்த்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்திகளுக்கு அவர்களது முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் 0112 784 208, 0112 784 537 அல்லது 0113 188 350 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கோ 0112 784 422 என்ற தொலைகநகல் இலக்த்திற்கோ முறைப்பாடுகளை முன்வைப்பதுடன், மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating