கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்

Read Time:1 Minute, 53 Second

ஆத்தூரை அடுத்த பாலாண்டிïரைச் சேர்ந்த சடையன் என்பவரின் மகள் மாரிமுத்தாள் (வயது 24). இவருக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தாள். மாரிமுத்தாள் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சின்னத்தம்பி என்ற செம்பட்டையன் (26), மாரிமுத்தாளை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். அவள் மறுக்கவே, அவளது தலை முடியை பிடித்து இழுத்தார். பின்னர் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். மாரிமுத்தாளை சின்னத் தம்பி ஆசைக்கு இணங்க வற்புறுத்திய தகவல் ஊர் பஞ்சாயத்தார்களான பவுன் தலையன் (வயது 46), சுந்த ரம் (54), சின்னப்பையன் (43), ஜெயமணி (45) ஆகியோ ருக்கு தெரியவந்தது. அவர் கள் 4 பேரும் சேர்ந்து சின்னத் தம்பியின் கை, கால்களை கட்டிப் போட்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் ஏத்தாப்பூர் போலீ சுக்கு தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்தார். மாரிமுத்தாள் கொடுத்த புகாரின்பேரில் சின்னத்தம்பி கைது செய்யப்பட்டார். சின்னத்தம்பி கொடுத்த புகாரின்பேரில் ஊர் பஞ்சாயத்தார் 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கையில் சண்டை * 28 புலிகள் பலி
Next post பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை `மர்ம’ சாவு