பிறந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை `மர்ம’ சாவு

Read Time:1 Minute, 56 Second

baby183.gifஜலகண்டாபுரம் அருகே குப்பம்பட்டி செல்லும் வழியில் செல்லப்பனூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (வயது 31), தனியார் பள்ளி வேன் டிரைவர். இவரது மனைவி சந்திரா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர் களுக்கு நித்யஸ்ரீ (வயது 1) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சந்திரா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்தார். 18 நாட்களுக்கு முன்பு இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 5 நாட்கள் கழித்து அந்தக்குழந்தையின் முகத்தில் கறுப்பு கலரில் புள்ளி, புள்ளியாக தோன்றியது. அந்தக் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் காட்டி சிகிச்சை பெற்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அந்தக் குழந்தை இறந்து போனது. பெண் குழந்தை பிறந்த 18 நாளில் இறந்த தகவல் கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். பெண் குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக இருந்ததாப அல்லது பெண் குழந்தை என்பதால் கொல்லப்பட்டதாப என்று தெரியவில்லை. அந்தக் குழந்தையின் பிணம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு பிணபரிசோதனை முடிந்த பிறகே குழந்தை எப் படி இறந்தது என்பது தெரிய வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்
Next post கள்ளக்காதலுக்கு உதவும் காயின் போன்கள்