களுவாஞ்சிக்குடி பகுதியில் அடையாளந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் மீட்பு…!! (படங்கள்)
களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தின் கிறித்தவ தேவாலயத்திக்கு வலது பக்கமாக உள்ள காட்டுப்பகுதியில் நேற்று (22) மாலை 6 மணியலவில் ஒரு சிறுவனால் பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண்ணின் சடலம் இனம் காண முடியாதவாறு தலைப்பகுதியில் சேதமாக்கப்பட்டு காட்டுப்பகுதில் போடப்பட்டுள்ளது.
இந்த சடலத்தின் தலைப்பகுதியில் மண்ணால் சிறிது முகம் தெரியாதவாறு மூடப்பட்டு காணப்பட்டதுசுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமொன்றே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
குறித்த பெண் மஞ்சள் நிற ஆடையை அணிந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்ணின் உடலில் எவ்வித வௌிப்புற காயங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்போது குறித்த சடலம் உள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating