எமனாக வந்த எருமை – உயிர் போன பரிதாபம்..!!
மாரவில மற்றும் சூரியவெவ பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெய்யந்தர மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் 26 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெய்யந்தர பகுதியிலிருந்து நாதுகல நோக்கி சென்ற உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாகவும்,இதன்போது மோட்டார் வண்டியில் பயணித்த சுரேஸ் இந்திக என்ற இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு
உழவு இயந்திரத்தின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சூரிவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மித்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 23 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் வண்டியானது எருமை ஒன்றின் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் இதன்போது சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த துமிந்த கயாசான் என்ற குறித்த இளைஞர் பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating