நாய்களுக்கு வெள்ளி தட்டில் சாப்பாடு வைத்து வளர்க்கும் ராணி எலிசபெத்…!!
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு தற்போது 90 வயதாகிறது. அவர் நாய்களின் மீது மிகவும் பிரியமானவர். தற்போது அவர் உயர்ரக 30 நாய்களை வளர்க்கிறார்.
அவை ராஜ உபசாரத்தில் வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு சத்தான அவை விரும்பும் உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. முயல் மற்றும் கோழி இறைச்சிகள் உணவாக கொடுக்கப்படுகின்றன.
இந்த நாய்களுக்கு சாதாரண இடத்தில் வைத்து உணவு வழங்க முடியாது. வெள்ளி தட்டில் தான் உணவு வழங்கப்படுகிறது. அதனுடன் ஓமியோபதி மற்றும் மூலிகை வகை மருந்துகள் கலக்கப்படுகிறது.
இதனால் அவை நோயின்றி ஆரோக்கியமாக வாழ்கின்றன. முதன் முறையாக ராணி எலிசபெத்துக்கு 18–வது பிறந்த நாளின் போது அவரது தந்தை 4–ம் ஜார்ஜ் மன்னர் மற்றும் தாயார் இணைந்து ‘சூசன்’ என்ற நாய் ஒன்றை பரிசளித்தனர். அதை தொடர்ந்து அவர் நிறைய நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்த நாய்களை விலங்கு நல மருத்துவரும், தெரபி பயிற்சியாளரும் பராமரித்து வருகின்றனர்
Average Rating