சிறுமியின் உயிரை பறித்த கைப்பேசி மோகம்..!!
ரஷ்யாவில் அதிகபடியான கைப்பேசி மோகம் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிகமான மொபைல்போன் மோகத்தினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாஸ்கோ நகரில் தனது தாயார் மற்றும் சகோதரருடன் குடியிருந்து வந்துள்ளார் 14 வயதான பெயர் வெளியிடப்படாத இந்த சிறுமி.
மொபைல்போன் அதிகம் பயன்படுத்தி வந்துள்ள இந்த சிறுமி, சம்பவத்தன்று குளிக்கும்போதும் மொபைல்போன் பயன்படுத்த விரும்பியுள்ளார்.
இதற்கென extension cord ஒன்றை பயன்படுத்திய அவர், அதன்வழியாக மொபைல்போன் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைடையே அவரது கைகளில் இருந்து தவறிய மொபைல்போன் தண்ணீரில் விழுந்து அதன் வழியாக மின்சாரம் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மிக கடுமையாக மின்சாரம் தாக்கிய அந்த சிறுமி உதவிக்கு கூட எவரையும் அழைக்க முடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் குளிப்பதற்காக சென்ற தமது மகள் இதுவரை குளியல் அறையில் இருந்து வெளியே வராதது கண்டு கலக்கமுற்ற தாயார்,
குளியலறையின் வாசலில் தட்டி சிறுமியின் பெயர் சொல்லி அழைத்துள்ளார், ஆனால் எந்த வித பதிலும் இல்லாதது கண்டு,
குளியலறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த அவர் உயிரற்ற தமது மகளின் உடல் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வரும்.
Average Rating