திரிஷா இனி சொந்தக் குரலில்தான் பேசி நடிப்பாராம்
Read Time:1 Minute, 4 Second
கேரளத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வரும் பல நடிகைகளும் இனிய தமிழில் பேசுகின்றனர். அசின், நவ்யா, மம்தா ஆகியோர் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு சொந்தக்குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால் திரிஷா தமிழகத்தில் பிறந்து வளர்ந்திருந்தும் அவருக்கு டப்பிங் கலைஞர் சவீதாதான் குரல் கொடுத்து வருகிறார். இதனை பலரும் விமர்சித்ததால் திரிஷாவுக்கு சொந்தக் குரலில் பேசி நடிக்க ஆசை வந்துவிட்டதாம். அதனால் தற்போது அவர் நடித்துவரும் அபியும் நானும் என்ற படத்தில் சொந்தக் குரலில் பேசப்போவதாக இயக்குநர் ராதாமோகனிடம் தெரிவித்திருக்கிறாராம். எனவே, இனிவரும் படங்களில் திரிஷாவின் சொந்தக் குரலைக் கேட்கலாம்.