குழந்தையில்லா பிரச்சினைக்கு ஆண்கள் காரணமானவர்களா…?

Read Time:10 Minute, 12 Second

download (3)குழந்­தை­யில்லா பிரச்­சினை ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­ப­தையும் அதற்கா ஆரம்ப கட்ட சட­வ­டிக்­கை­க­ளையும் கடந்த இதழில் பார்த்தோம்.

இதில் ஒன்­றாக மருத்­து­வர்கள் கொடுக்கும் மருந்­து­களை தொடர்ந்து எடுக்க வேண்டும். கொடுக்கும் மருந்­து­களை தொடர்ந்து எடுத்தால் பிள்ளை பேறு கிடைக்­குமா? வைத்­தி­யரின் ஆலோ­சனை படி மருந்து வகை­களை உட்­கொண்டால் குறிப்­பிட்ட நில நாட்­களில் உரிய பய­னைப்­பெ­றக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

பெரும்­பா­லா­ன­வர்கள் நினைக்­கின்­றார்கள் மாத்­தி­ரை­களை ஒரு மாதம் மாத்­திரம் உட்­கொண்டால் பயன் கிடைக்கும் என நினைக்­கின்­றார்கள். அது முற்­றிலும் தவ­றான விடயம். வைத்­தி­யர்கள் கொடுக்கும் இவ்­வா­றான மருந்து வகை­களை உரி­ய­வர்கள் கருத்­த­ரிப்பு ஏற்­படும் வரை உட்­கொள்­ளு­வ­துவே சிறந்­தது. சில சய­மங்­களில் ஒரு­மாதம் வரையில் மருந்­து­களை எடுத்­து­விட்டு பலன் கிட்­டாத பட்­சத்தில் நிறுத்தி விடு­கின்­றனர்.

இங்கு யாவரும் அறிந்து கொள்ள வேண்­டிய முக்­கி­ய­மான விடயம் என்­ன­வெனின், ஒரு விரைப்­பையில் உரு­வா­கக்­கூ­டிய உயி­ர­ணுக்­களும் சினைப்­பையில் உரு­வா­கக்­கூ­டிய முட்­டை­களும் நமக்கு கருத்­த­ரிக்கும் சூழ்­நி­லை­யா­னது மூன்று மாதங்­க­ளுக்கு தான் ஏற்­ப­டு­கி­றது.

எப்­படி ஒரு பெண்ணின் கர்ப்­பப்­பையில் கரு உரு­வாகி பத்து மாதம் கழித்து குழந்­தை­யாக வெளி­வ­ரு­கி­றதோ அதே போன்று தான் சினைப்­பை­யிலும் விரைப்­பை­யிலும் ஒரு உயி­ர­ணுக்­களும் முட்­டை­களும் உரு­வா­கினால் மூன்று மாதம் கழித்து தான் அது வெளி­வந்து கருத்­த­ரிக்க பயன்­ப­டு­கி­றது. அதனால் நாம் எடுக்­க­க்கூ­டிய நல்ல முயற்­சிகள் நல்ல மாற்­றங்கள் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை சூழ்­நி­லைகள் இவை­ய­னைத்­துமே குறைந்­தது ஒரு மூன்று மாதங்­களின் பின்­னரே அத­னு­டைய முன்­னேற்­றங்­களை அறி­யக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

மருந்­து­களை தவிர்த்து வேறெ­து­முண்டா எனக்­கேட்டால் ஆம்! நிச்­ச­ய­முண்டு நம்­மு­டைய நியூற்­றியன்ஸ், மினரல்ஸ் ,விற்­ற­மின்­களை நமது உட­லுக்குத் தேவை­யான அளவு உட்­கொள்ள வேண்டும். .நம்­மு­டைய உடம்பில் தற்­போது எதிர்ப்பு சக்­திக்­கு­றைப்­பா­டுகள் அதிகம் ஏற்­ப­டு­கின்­றன.

நம்­மு­டைய உடலில் நமக்கே தெரி­யாமல் பல மாற்­றங்கள் நிகழ்­கி­றது. சில சம­யங்­களில் நாம் நேரத்­திற்கு உண்­பது, உறங்­கு­வது இல்லை. உடற்­ப­யிற்சி செய்­வ­தில்லை.

காரணம், வேலை பளு. இதனை ஈடு செய்­வ­தற்கு ஆன்­டீ­ஆக்­ஸிஜன் எமக்கு தேவைப்­ப­டு­கின்­றது. இவற்றை நாம் கொடுக்கும் போது வயது அதி­க­ரித்­த­வர்­க­ளின வயதை திரும்ப பெற­மு­டி­யா­வி­டினும், கூட உயி­ர­னுக்­களின் செயற்­பாட்­டினை சற்று அதி­க­ரிக்க முடி­கி­றது..

இதற்கு மல்டி விற்­றமின்ஸ், மினரல்ஸ், ஆன்டீ ஆக்­ஸிஜன் ஆகி­யவை உயி­ர­ணுக்­களின் செயற்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­கின்­றன.

இவற்றை கணவன் மனை­விக்கு கொடுத்து மூன்று மாதத்­திற்கு தொடர்ச்­சி­யாக கொடுக்கும் போது இயற்­கை­யா­கவே கருத்­த­ரிக்கும் வாய்ப்பு ஏற்­ப­டு­கின்­றது. இம்­ம­ருந்­து­க­ளினால் எவ்­வித பக்க விளை­வு­களும் ஏற்­ப­டாது.

இதனை நோய்க்கு மருந்து உண்­ப­தாக எடுத்­துக்­கொள்­ளவே தேவை­யில்லை ஆகையால் கருத்­த­ரிப்­ப­தற்­கு­ரிய நிலைப்­பாட்டை ஒரு வரு­டத்­திற்கு முன்­பி­ருந்தே தேவை­யான ஆலோ­சனைகளை பெற்று நடந்து கொள்­வது சிறந்­தது.

ஆண்­க­ளுக்கு ஏற்­படும் குறை­பா­டுகள் அதி­க­ரிக்­குமா?

2000 ஆம் ஆண்­டு­களில் குழந்­தை­யின்மை பிரச்­சினை 3 சத­வீ­தத்தில் இருந்து 20 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. இன்றும் 10 வரு­டங்­களில் இப்பி­ரச்­சினை 7 மடங்கு அதி­க­ரிப்­ப­தற்கு வாய்ப்பு இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆண்­க­ளுக்கே இவ்­வா­றான பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புக்கள் இருப்­ப­தாக ஆய்­வுகள் மூலம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பெண்­களை விட ஆண்­க­ளுக்கே அதி­க­ள­வி­லான சமூக பிரச்­சினைகள் ஏற்­ப­டு­கின்­றன. பெண்­களை விட ஆண்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். பெண்­களை விட பெரும் எண்­ணிக்­கை­யி­லான ஆண்­களே இன்று வேலைக்குச் செல்­கின்­றனர். வேலைப்­பளு அதி­க­ரிப்பு வீட்டுச் சுமை என பல­த­ரப்­பட்ட அழுத்த விட­யங்­களில் ஆண்­களே பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

அத்­துடன் தற்­போது வேலைக்குச் செல்லும் அதிக எண்­ணிக்­கை­யி­லான ஆண்கள் இரு­சக்­கர வாக­னங்­க­ளையே (மோட்டார் சைக்கிள்) பயன்­ப­டுத்­து­கின்­றனர். இவ்­வாறு இரு­சக்­கர வாகன பயன்­பாட்டின் போது ஆண்­களின் உடலில் வெப்பம் மேலும் அதி­க­ரிப்­ப­தாக அண்­மைய ஆய்­வொன்றில் தெரி­ய­வந்­துள்­ளது.

எப்­போதும் ஆண்­களின் விரைப்­பி­லி­ருக்­கக்­கூ­டிய தோல் அமைப்­பா­னது வித்­தி­யா­ச­மாக இருக்கும். உடற்தோற் பகு­தியை விட சற்று வித்­தி­யா­ச­மாக இருக்கும். ஆகையால் குறிப்­பிட்ட அப்­ப­கு­திக்கு அதி­க­ள­வான காற்­றோட்டம் தேவைப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு இரு சக்­க­ரங்கள் மற்றும் தொடர்ச்­சி­யாக இருக்­கையில் அமர்ந்­த­வாறே வாக­னத்தை செலுத்திச் செல்­லுதல் போன்ற கார­ணங்­களால் காற்­றோட்டம் இல்­லாது போகின்­றது.

ஒரு பெண் கருவில் ஆண் குழந்­தையை சுமக்கும் போது விறை­யா­னது வயிற்றில் இருக்கும் அதுவே குழந்தை பிறந்த பின் விரை கிழி­றங்­கி­விடும். அது அவ்­வாறு இறங்­க­வில்­லை­யாயின் அதனுள் வளர்ச்­சியை எதிர்ப்­பார்க்க முடி­யாது. விரை வயிற்­றுக்குள் இருக்கும் போது சிறி­தாக இருக்கும் கீழி­றங்­கிய பின் தான் அது வளர்ச்­சி­யடை­யவே ஒரு சூழ்­நிலை ஏற்­ப­டு­கின்­றது இது முத­லா­வது விடயம்.

இரண்­டா­வது விடயம் என்­ன­வெனில், நம்­மு­டைய உடலில் உள்ள உடல் டெம்­ப­ர­ஜி­யினை பார்த்­தோ­மானால் எல்லா இடத்­திலும் ஒரே மாதி­ரி­யாக இருக்கும். ஆனால், பிற இடங்­களை விட அவ்­வி­டத்தில் 1 டிகிரி குறை­வா­க­வி­ருக்கும். இந்த விரைக்கு ஒரு குளிர்ச்சி தேவை . அத­னு­டைய செயற்­பா­டுகள் திற­மா­கவும் முழு­மை­யா­கவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு குளிர்ச்சி தன்மை வேண்டும்.

தற்­போ­தைய கால­கட்­டத்தில் ஆண்கள் எரி­சக்­கர வாக­னத்தை அதி­க­மாக உப­யோ­கிக்க ஆரம்­பித்­து­விட்­டனர். இதனால் அவர்­களின் உடல் வெப்­ப­நிலை அதி­க­மா­கி­றது. இதனால் விரை­யில்­அ­திக நரம்பு பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­றன பெண்­க­ளோடு ஒப்­பிடும் போது ஆண்கள் தான் அதி­க­மாக உட­னடி ( fast food ) உண­வு­களை உட்­கொள்­கின்­றனர். அதனால் அத­னாலும் எடை ரீதி­யாக கூட பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அத்துடன் மதுபாவனை மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பல பிரச்சினைகளும் குழந்தையில்லாப் பிரச்சினைக்கு காரணமாகின்றது. அதிகமாக பயன்படுத்தும் தொழில்நுட்ப சாதனங்கள் இவை அனைத்தும் பெண்களை விட ஆண்களுக்கே அதிகரித்த பிரச்சினைகளை ஏற்படுத்திவருகிறது. இவையும் குழந்தையின்மைக்கு பிரதான காரணமாகிவிடுகின்றது…. கால சூழலுக்கேற்ப மாறுதல்கள் ஆண்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குரங்கிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் குழந்தை…. யாராவது காப்பாற்றுங்களேம்ப்பா…!!
Next post லொறியிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு..!!