அரக்கோணத்துக்கு பஸ்சில் சென்ற பெண்ணின் 45 பவுன் நகை–பணம் மாயம்..!!
சென்னை அண்ணனூரை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 62). இவரது கணவர் இறந்துவிட்டார். சம்பவத்தன்று ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள ரகுநாதபுரம் என்ற இடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று சொந்த ஊருக்கு திரும்பினார். பஸ்சில் சோளிங்கருக்கு வந்தார். அங்கிருந்து அரக்கோணத்துக்கு பஸ்சில் சென்று பின்னர் ரெயிலில் சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவர் சோளிங்கரில் இருந்த அரக்கோணத்துக்கு பஸ் ஏறினார். சாலை கிராமம் அருகே பஸ் சென்ற போது அவரது பையில் இருந்த பர்சை காணவில்லை. அதில் 45 பவுன் தங்க நகையும், ரூ.65 ஆயிரம் ரொக்க பணமும் இருந்தது. பர்ஸ் மாயமானது குறித்து புகார் செய்ய அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு ரத்தினம்மாள் சென்றார். ஆனால் பர்ஸ் மாயமானதாக கூறப்படுவது அரக்கோணம் தாலுகா எல்லைக்குட்பட்டதாகும். எனவே அங்கு சென்று புகார் செய்ய டவுன் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு சென்று ரத்தினம்மாள் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜோதி ராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து ரத்தினம்மாளின் நகை–பணம் இருந்த பர்ஸ் திருடப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating