இலஞ்சம் பெற முற்பட்ட அதிபர் கையும் களவுமாக சிக்கினார்…!!
Read Time:50 Second
50,000 ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட நிட்டம்புவ சங்கபோதி மகா வித்தியாலய அதிபர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாடசாலையில் மாணவர் ஒருவரை அனுமதிக்க இன்று காலை குறித்த இலஞ்சத் தொகையை பெற முற்பட்ட வேளையே அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.
Average Rating