இங்கிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா குட்டி…!!
Read Time:1 Minute, 18 Second
தென்மேற்கு இங்கிலாந்தின் பிரிஸ்ட்டல் நகரில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் கேரா என்ற பெண் கொரில்லா குரங்கு சமீபத்தில் கருத்தரித்தது.
பிரசவக்காலம் நெருங்கும் வேளையில் தனது கருப்பையில் வளர்ந்துவந்த அந்த பெண் குட்டியை இயற்கையான முறையில் ஈன்றெடுக்க முடியாத நிலையில் கேரா அவதிப்படுவதை கண்டு அங்கிருந்த பராமரிப்பு பணியாளர்கள் கவலை அடைந்தனர்.
உடனடியாக விலங்குகளுக்கு பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவரான மகப்பேறு நிபுணர் டேவிட் காஹில் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார். சிசேரியன் ஆபரேஷன் மூலம் கேராவின் வயிற்றில் இருந்து அந்தப் பெண் குட்டி வெளியே எடுக்கப்பட்டது.
பெயரிடப்படாத அந்த குட்டியின் உயிரை புட்டிப் பாலின் மூலம் காப்பாற்ற வனவிலங்கு காப்பக ஊழியர்கள் முயற்சித்து வருகின்றனர்.
Average Rating