அமெரிக்காவில் சூறைக்காற்றுக்கு 3 பேர் பலி…!!

Read Time:1 Minute, 45 Second

95345518-ea4e-40d2-924b-0e5c4d722a50_S_secvpfஅமெரிக்காவின் லூசியானா மற்றும் மிஸிஸிப்பி பகுதிகளை சூறையாடிய சூறைக்காற்றுக்கு மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

பலத்த வேகத்துடன் சுழன்றடித்த காற்றின் விளைவாக சுமார் 200 தற்காலிக குடியிருப்புகள் நாசமடைந்தன. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மரங்கள் முறிந்து விழுந்த விபத்தில் மிஸிஸிப்பி ஆற்றங்கரையோரமுள்ள பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கான்வெண்ட் பகுதியில் இருவரும், தெற்கு மிஸிஸிப்பியில் உள்ள புர்விஸ் நகரில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்ளூர் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

லூசியானா பகுதியில் காயமடைந்த 30-க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து, புளோரிடா, ஜியார்ஜியா மாநிலங்களையும் அட்லான்ட்டாவின் சில பகுதிகளையும் பலத்த சூறைக்காற்று தாக்கக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின் மூலம் ஸிகா நோய்த்தொற்று: அமெரிக்காவில் கர்ப்பிணி உள்பட 14 பெண்களுக்கு பாதிப்பு…!!
Next post பெருங்களத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி…!!