பெருங்களத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி…!!
Read Time:1 Minute, 2 Second
செம்பாக்கத்தில் வசித்து வருபவர் அனூப் (28). கேளராவை சேர்ந்த இவர் நண்பர் சதீசுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பெருங்களத்தூர் அருகே வந்த போது தவறுதலாக மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றனர். உடனே அவர்கள் சாலை தடுப்பை தாண்டி எதிர்புறம் வந்தனர்.
அப்போது டேங்கர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் அனூப் சம்பவ இடத்திலேயே பலியானர். சதீசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அமைந்தகரை மஞ்சங் கொல்லை தெருவில் வசித்து வந்தவர் சீனிமுகமது (34) எலக்ட்ரீசியன். இவர் கொரட்டூர் கெனால் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6–வது மாடியில் பணியில் ஈடுபட்டார். அப்போது தவறி விழுந்து சீனிமுகமது பலியானார்.
Average Rating