எக்னலிகொட குறித்த மனு மே 30ம் திகதி விசாரணை…!!
Read Time:55 Second
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் மே மாதம் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும், இந்த மனுவில் பதிலளிப்பவர்களாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரைப் பெயரிட அண்மையில் நீதிமன்றம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating