9 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்…!!

Read Time:2 Minute, 15 Second

985080055Untitled-1உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒன்பது பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவையின் தேவை நிமித்தம், பொலிஸ் மா அதிபரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புஸ்ஸல்லாவ பொறுப்பதிகாரியாக இருந்த எச்.எம்.டி.ஹேரத் தெமட்டகொடை குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும், ஜா-எல பொறுப்பதிகாரி எல்.களுஆராச்சி புஸ்ஸல்லாவ பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

மேலும், காங்கேசன்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் என்.டப்ளியூ.லோரன்ஸ் ஜா-எல பொறுப்பதிகாரியாகவும், பிரதம பொலிஸ் அதிகாரி ஜீ.எஸ்.அமரதுங்க சிலாபம் பிரிவில் இருந்து காங்கேசன்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் நவகமு பொறுப்பதிகாரி ஏ.பி.சேனாநாயக்க கொழும்பு மாவட்டத்துக்கும் இளவாளை பொறுப்பதிகாரி கே.எம்.டி.சில்வா நவகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகவும், பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஆர்.சேனாநாயக்க யாழ்ப்பாண பிரிவில் இருந்து இளவாளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு மேலதிகமாக கிரிஎல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.எச்.சில்வா கொழும்பு மாவட்டத்துக்கும், பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.எம்.ஜே.எஸ்.பண்டார கிரிஎல்ல பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எக்னலிகொட குறித்த மனு மே 30ம் திகதி விசாரணை…!!
Next post யோசித்த உள்ளிட்ட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!