வேப்பம்பட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்தது – வாலிபர் தீயில் கருகினார்…!!
வேப்பம்பட்டை அடுத்த சத்திரம், அண்ணாநகரை சேர்ந்தவர் நாகராஜ் சூரப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றுவிட்டார். இதனால் நாகராஜ் வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டு வந்தார்.
இன்று காலை அவர் சமையல் செய்து கொண்டு இருந்த போது கியாஸ் கசிந்து தீப்பிடித்து சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் அருகில் நின்ற நாகராஜ் உடல் கருகினார். வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சிலிண்டர் வெடித்த வேகத்தில் வீட்டின் மேற்கூரை ஆஸ்பெட்டா சீட்டுகள் நொறுங்கி சிதறின. பொருட்களும் தூக்கி வீசப்பட்டு கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உடல் கருகிய நாகராஜை மீட்டு கீழப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating