கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 4 பேர் கைது..!!

Read Time:1 Minute, 44 Second

b25f0add-c19d-4daa-9fb8-3e2fb8cea276_S_secvpfமதுரவாயல் ஏரிக்கரையை சேர்ந்தவர்கள் விக்னேஷ், ரமேஷ், வினோத், விக்னேசின் மனைவி பரமேஸ்வரி (25). இவரது உறவினர் பாலாஜி. இவரது மனைவி சிவகாமி. இவர்கள் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் பெரம்பூர் வந்து அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்த்து விட்டு இரவு வீடு திரும்பினர்.

மதுரவாயல் அருகே சென்ற போது, தாழம்பூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிளை இடிப்பது போல் சென்றது.

இதனால் விக்னேசுக்கும் பஸ் டிரைவர் நரசிம்மனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் நரசிம்மன் பஸ்சை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் 6 பேரும் 4 மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்து நரசிம்மனிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரம் அடைந்து 6 பேரும் நரசிம்மனை தாக்கினர். பின்னர் அவர்கள் தப்பி சென்றனர்.

நரசிம்மனை தாக்கியவர்களை உடனே கைது செய்ய கோரி பணியில் இருந்த டிரைவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இரவு பயணிகள் அவதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கோயம்பேடு உதவி கமிஷனர் உத்தரவின் பேரில் ரமேஷ், வினோத், பரமேஸ்வரி சிவகாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய்: ரூ.493 கோடி நஷ்ட ஈடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு…!!
Next post கொடுங்கையூரில் தாய் திட்டியதால், சிறுவன் தற்கொலை…!!