பிரசவத்தின் பின்னர் இளம் தாய் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவு..!!
Read Time:1 Minute, 25 Second
பிரசவத்தின் பின்னர் இளம் தாய் ஒருவர் வைத்தியசாலையிலிருந்து குழந்தையுடன் தலைமறையாகியுள்ளார்.
இந்தச் சம்பவம் தம்புள்ள வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலேவல,புலனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த யுவதிக்கு ஆண் குழுந்தை பிறந்த நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் இருந்து குழந்தையுடன் தலைமறைவாகியிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளன.
அந்த யுவதி இளம்வயது என்பதால் சட்டபிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்ற பயத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating