தாய்லாந்து: கத்தியால் குத்தி, புதைக்கப்பட்ட சிசு உயிருடன் மீட்பு..!!
Read Time:1 Minute, 10 Second
தாய்லாந்தில் கத்தியால் பல முறை குத்தப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்ட ஆண் சிசு உயிருடன் மீட்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கோன் கேன் மாகாணத்தில், யூகலிப்டஸ் மரங்கள் நிறைந்த காட்டில், ஒரு பெண் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
அந்தப் பகுதிக்குச் சென்று பார்த்தபோது, உடலில் 12-க்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்களுடன் ஒரு பச்சிளம் குழந்தை குழிக்குள் போடப்பட்டு, இலைகளால் மூடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
உடனடியாக அந்தக் குழந்தை மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை குழிக்குள் விசி மூடியவர்களைத் தேடி வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating