இலங்கையில் சண்டை * 28 புலிகள் பலி

Read Time:1 Minute, 16 Second

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நடந்த கடும் சண்டையில் 28 விடுதலைப் புலிகளும், ராணுவ வீரர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இலங்கையில் மன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. மன்னார் மாவட்டம், அடம்பன் என்ற இடத்தில் நடந்த சண்டையில் பத்து விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். பரப்பகந்தல் என்ற இடத்தில் நடந்த சண்டையில் ஐந்து புலிகள் பலியாயினர். யாழ்ப்பாணம், முகமாலையில் நடந்த சண்டையில் இரண்டு புலிகள் உயிரிழந்தனர். வவுனியாவிலும் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருகிறது. இங்கு நடந்த சண்டையில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். புலிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் ராணுவத்தினர் கைப்பற்றினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்து வந்து உல்லாசம்; தட்டிக்கேட்ட மனைவிக்கு அடி
Next post கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணை, ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர்