கழுத்துப் பட்டி இறுகி மாணவன் பலி – கொலையென சந்தேகம்..!!
மாணவனொருவன் கழுத்துப்பட்டி இறுகியதினால் (டை) மரணமான சம்பவமொன்று பூனாகலையில் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பூனாகலை தோட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் பேரின்பநாதன் என்ற தரம் ஐந்தில் கல்வி கற்று வந்த 11 வயது நிரம்பிய மாணவனே இவ்வாறு மரணமானவராவார்.
இம்மாணவன் பூனாகலை சிங்கள வித்தியாலயத்தில்,சிங்கள மொழி மூலம் கல்வி கற்று வந்தவர் ஆவார்.
இம்மாணவனின் பெற்றோர் கொழும்பில் தொழில் செய்வதனால், மாணவன் பாட்டியின் பராமரிப்பிலிருந்தவாறு, கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவ தினத்திற்கு முன்தினம், இம்மாணவனுக்கு (டை) கழுத்துப்பட்டி பாடசாலையால் வழங்கப்பட்டுள்ளது.
கழுத்துப்பட்டியுடனேயே, மாணவனின் மரணம் சம்பவித்ததினால், குறித்த மரணம் தொடர்பாக பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கமைய மாணவனின் சடலம் பதுளை சட்ட வைத்திய விசாரணைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், பதுளை சட்ட வைத்திய அதிகாரி விடுமுறையில் சென்றிருப்பதனால், கண்டி அரசினர் சட்ட வைத்திய விசாரணைக்கு இன்று பகல் மாணவனின் சடலம் அனுப்பப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இம்மரணம் கொலையாக இருக்கலாமென்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Average Rating