மரமாக மாறிய மனிதர்: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்திய மருத்துவர்கள்…!!
வங்கதேசத்தில் மர மனிதர் என்று அழைக்கப்பட்ட நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் குல்னா வசித்து வந்த, அபுல் பஜந்தர் என்பவர் Epidermodysplasia Verruciformis என்ற அரிய வகை தோல் வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு 10 வருடங்களுக்கு முன்னர், இவரது கைகளில் சிறு மரப்பட்டைகள் வளர ஆரம்பித்தன, இதனைத்தொடர்ந்த அருகில் உள்ள மருத்துவரை அனுகிய போது, மருத்துகளை கொடுத்த அவர், என்னால் இதனை குணப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
இதன் பின்னர் 3 வருடங்களுக்கு பின்னர், பட்டை போன்ற விழுதுகள் அவரது இரண்டு கைகளையும் முழுதாக மூடிவிட்டன, இதனால் கடினமான வேதனையை அனுபவித்த அவருக்கு, தனது அன்றாட பணிகளை செய்யவும், உணவு உண்ண முடியாமலும் சிரமப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் இவரது மருத்துவ செலவுகளை வங்கதேச அரசாங்கம் ஏற்றுக்கொண்டதையடுத்து, வங்கதேசத்தின் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான Dr. Samanta Lal Sen தலைமையின் கீழ் 9 பேர் அடங்கிய மருத்துவ குழு இவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர் Sen கூறியதாவது, இந்த அறுவை சிகிச்சை எங்களுக்கு விசித்திரமான ஒன்றாக இருந்தது, முதலில் லேசர் மூலம் அவரது கையில் உள்ள மருக்கள் மற்றும் இறந்த செல்களை நீக்கினோம்.
ஆனால், இந்த சிகிச்சையை மேற்கொள்ளும்போது, அவரது கையில் உள்ள முக்கியமான நரம்புகள் துண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம்.
அவரது இடது கையில் இருந்த பட்டைகளை நீக்கிவிட்டோம், 3 வாரங்களுக்கு பின்னர் வலது கையில் அறுசை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், எப்படியும் முழு அறுவை சிகிச்சை காலம் முடிவடைவதற்கு 6 மாதங்கள் ஆகும்.
ஆனால், இந்த விசித்திர நோய் மீண்டும் தாக்காது என்றும், இது முழுமையாக குணமடையும் என எங்களால் கூற இயலாது என மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த சிகிச்சையால் அபுலின் குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
Average Rating