ஜார்கண்ட் மாநிலத்தில் சிறுத்தை தாக்கி 2½ வயது சிறுவன் பலி..!!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மோடிசூர் என்ற கிராமத்தில் உள்ள தனது வீட்டில் 2½ வயது சிறுவன் அகில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தான். அப்போது திடீரென வீட்டுக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது. அப்போது அந்த சிறுத்தை அகிலை கடித்துக்குதறியதுடன், வீட்டில் இருந்து வெளியே இழுத்துச்சென்றது.
அந்த நேரத்தில் அங்கு வந்த கிராமத்தினர் சிறுத்தையை துரத்திச்சென்று சிறுவனின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு பாதி உடல் மட்டுமே கிடைத்தது. சிறுவன் அகிலை சிறுத்தை கடித்து கொன்றதால், ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்கள் கிராமத்துக்குள் புகுந்து மனிதர்களை கொல்லும் சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Average Rating