தம்புள்ளையில் சடலம் மீட்பு..!!
Read Time:52 Second
தம்புள்ளை, மஹாவலி ஓடை மதிலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் ஓடையை கடக்க முற்பட்ட வேளை ஓடையினுள் விழுந்து உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தம்புள்ளை, புலன்எல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating