2–வது திருமண முயற்சி: கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் ஆந்திர பெண் தர்ணா…!!
கரூர் பைபாஸ் ரோடு திருவிக.சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 38). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை சம்பந்தமாக ஆந்திரா சென்றார். அப்போது கடப்பா பகுதியை சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு லட்சுமியை கரூருக்கு அழைத்து வந்து , தனது பெற்றோருக்கு தெரியாமல் கரூரில் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 5 மாதத்தில் ஹரீஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் பிரபுவுக்கு அவரது பெற்றோர் வேறு திருமணம் செய்ய முயற்சி செய்தனராம். இதையறிந்த லட்சுமி நேற்று தனது குழந்தையுடன் பிரபு வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் கரூர் டவுன் போலீசார் சென்று லட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் போலீசார் பிரபுவையும், அவரது பெற்றோரையும் அழைத்து விசாரணை நடத்தவில்லை.
இதையடுத்து லட்சுமி மீண்டும் பிரபுவின் வீடு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து தாந்தோணிமலையில் உள்ள எஸ்.பி.அலுவலகம் சென்று தர்ணாவில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீசார் அவரை மீண்டும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி லட்சுமி கூறுகையில், எனது கணவருக்கு அவரது பெற்றோர் வேறு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இது குறித்து நான் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து தடுத்து நிறுத்தினர். தற்போது மீண்டும் திருமணம் செய்து வைக்கவும், வெளிநாட்டுக்கு அனுப்பவும் முயற்சி செய்கின்றனர். பணம் தருவதாக என்னிடம் பேரம் பேசுகின்றனர். போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Average Rating