தலித் சிறுமியை கற்பழித்ததுடன் தீவைத்து எரித்த கும்பல்: உ.பி.யில் பதற்றம்…!!
Read Time:1 Minute, 4 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வயல்காட்டுக்குச் சென்ற தலித் சிறுமியை கற்பழித்ததுடன் அவள்மீது மண்ணெண்ணை ஊற்றி கொல்ல முயன்று தப்பிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோட்சையா கிராமத்தில் உடலில் தீப்பற்றிய நிலையில் அலறித்துடித்த சிறுமியின் அவலக்குரல் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்து வீட்டார் தீயை அணைத்து காசிபூர் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் சோனு யாதவ், பிரதிப் யாதவ் மற்றும் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating