நீர்வேலியில் மீண்டும் திருட்டு…!!
Read Time:1 Minute, 25 Second
நீர்வேலியில் சில நாட்களுக்கு முன்பு திருட்டொன்று இடம்பெற்ற சில நாட்களே இருக்க மற்றுமொரு திருட்டுச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாஸ்ரர் தொலைத்தொடர்பு நிலைய கடைக்குள் ஓடு பிரித்து நுழைந்த திருடர்கள் அங்கிருந்த தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகள் பிஸ்கட்டுகள், இனிப்புகள் குளுக்கோஸ், பிளேட்டுகள் என்பன திருடப்பட்டுள்ளன எனினும் கடை உரிமையாளரால் அன்றிரவு கடையை பூட்டும் போது பணத்தை எடுத்துச் சென்றதால் பணம் தப்பித்துள்ளது.
ஆனால் அங்கிருந்த குபேரன் சிலைக்குள் இருந்த சில்லறைக் குற்றிகளை எடுத்துச் சென்றுள்ளார்கள்.
இது தொடர்பாக கடை உரிமையாளரால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டனர்.
Average Rating