துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் பலி…!!
Read Time:54 Second
வீரகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிமெடிய சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேனில் வந்த சாரதி உள்ளிட்ட இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவருமே காயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், வேன் சாரதி சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
Average Rating