தலவாக்கலையில் கொள்ளை – ஒருவர் கைது…!!
Read Time:1 Minute, 18 Second
தலவாக்கலை நகர பகுதியில் இன்று (28) அதிகாலை 04.00 மணியளவில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் கடைகளை உடைத்துக்கொண்டிருக்கும் போது, நகரத்தில் உள்ள சிலர் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொலிஸார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் ஹட்டன் – டன்பார் பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நகை கடை ஒன்றும் பலசரக்கு கடைகள் இரண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating